போற்றுதலுக்குரிய பெண்கள்....!

பெண்களாக பிறக்க மாதவம் செய்யவேண்டும்மம்மா ...
அப்படி சிறந்த தவம்செய்து இப்புவியில் பிறந்த பெண்கள் போற்றுதலுக்கு உரியவர்களே.
   கல்விக்கு சரஸ்வதி, வீரத்திற்கு பராசக்தி, செல்வத்திற்கு மகாலட்சுமி போல
அன்புக்கும் கருணைக்கும் அன்னை தெரசா..
ஆன்மீகத்திற்கு சாரதா அம்மை....
வீரத்திற்கு ஜான்சிராணி லட்சுமிபாய்...
அறிவுக்கும் விவேகத்திற்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி...
சமுகசேவைக்கு சிவராஜ்மீனாம்பாள்....
விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் ஹெலன்கெல்லர்....
இரும்பு மனுஷிக்கு இந்திராகாந்தி.........
விண்வெளி அதிசயத்திற்கு  கல்பனா சாவ்லா...
ஒளிரும் கண்டுபிடிப்புக்கு மேரி கியூரி...
காதலுக்கு அமராவதி,லைலா,அனார்கலி,...
தங்கப்பதக்கத்திற்கு  பி டி உஷா...
நடிப்புக்கு சாவித்திரி............
இசைக்கு ஒரு குயில் சுப்புலட்சுமி...
பாட்டுக்கு பி சுசிலா...... 
கண்டிப்புக்கும் தலைமைக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதா...
  போல நம்மிடையே வாழ்ந்து மறைந்த, வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள். நல்ல பெண் குழந்தைகள், குணவதியான மனைவிகள், நல்ல குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்கள் போற்றுதலுக்கு உரியவர்களே.
   நல்லபெண்களுக்கிணையான உயிர்களும் உண்டோ  இப்புவியில் ! ஆவதும் அழிவதும் அவளின்றி துளியும் நடவாது, நன்;மையும் தீமையும் பெண்களின் கைகளிலே. எத்தனையோ பெண்களின் சாதனைகள் ஒளிர்ந்தாலும் நம் ஒவ்வொருவர் வீட்டு மகளிர் அனைவரும்  போற்றுதலுக்குரியவர்களே .பல மகான்களையும், நல்ல ஆசிரியர்களையும், நல்ல பல தேசத்தலைவர்களையும், ஆன்மீக சிந்தனையாளர்களையும் ,சிறந்த கல்விமான்களையும் , பல அறிவியல் கண்டுபிடிப்பாளர்களையும் , வீர தீர விளையாட்டுவீரர்களையும் ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் சிறந்து விளங்கியவர்களையும் பெற்றெடுத்த தாய்மார்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்களே!
   பெண்ணினமே ! நிந்தன் அன்பாலும் பொறுமையாலும், தியாகத்தாலும் மனித குலம் செழித்து வாழ உன்னை ஆராதிக்கிறோம், போற்றுகிறோம்....
Previous
Next Post »
Post a Comment
Thanks for your comment